Thursday, November 11, 2010

சாம்பார் பொடி மற்றும் அரைத்து விட்ட குழம்பு

சாம்பார் பொடி:

கொத்தமல்லி விதை (தனியா) - 250g
துவரம் பருப்பு - 50g
கடலை பருப்பு - 50g
சிவப்பு மிளகாய் வற்றல் (நன்கு காயவைத்தது) - 200 g
வெந்தயம் - 10 g
கொத்தமல்லி வெந்தயம் இரண்டையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
மற்றவைகள் நன்கு காய்ந்து இருக்கவேண்டும்.
மாவு திரிக்கும் மிசினில் கொடுத்து திரித்துக் கொள்ளவும்.
நல்ல மிக்சியில் கூட திரித்துக் கொள்ளலாம்.

அரைத்து விட்ட குழம்பு:

கொஞ்சமாக எண்ணெய் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வறுத்துக் கொண்டு (same proportion ) அதனுடன் வெறும் 1-2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து 'பர பர' வென அரைத்துக் கொள்ளவும். ஒரு இழுப்பவானளியில் காய்களை (சதுரமாக நறுக்கிய உருளை, கத்திரிக்காய், அவரைக்காய், நீளமாக நறுக்கிய காரட் ) சற்று வதக்கி புளித் தண்ணீர் விட்டு (salt) நன்கு கொதித்தவுடன் (புளியின் பச்சை வாசனை போன பின் , add asafetida powder ) இந்த அரைத்த விழுதை அதன் தலையில் கொட்டி (நிறைய நேரம் கொதிக்கக் கூடாது ; தேங்காய் கொதித்தால் எண்ணெய் விட்டு taste மாறிவிடும்; சாம்பார் பொடியின் பச்சை வாசனை இருக்காது - வறுத்து விடுவதால்) ஒரு கொதி வந்தவுடன் பருப்பு சேர்த்து வழக்கம் போல அரிசி மாவு (கால் ஸ்பூன்) கரைத்து விட்டு இறக்கினால் .... அரைத்து விட்ட குழம்பு ரெடி!!

Monday, November 8, 2010

எரிசேரி



இது ஒரு டிபிகல் பிராமின் பதார்த்தம். பெயர்க் காரணம் பின்னர் தெரிவிக்கப் படும்.

சுமார் 10 மிளகுடன் கால் மூடி தேங்காய் துருவல் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு அரை கப் தண்ணீர் விட்டுக் கொள்ளுங்கள்.

வாழைக்காய் (2) மற்றும் சேனை கிழங்கு (1/4 Kg) இதன் main ingredients. இரண்டையும் சதுரமாக வெட்டிக் கொண்டு ஒரு பிரஷர் cooker இல் கீழே சேனையையும் மேலே வாழைக்காய் ஐயும் வைத்து அரைத்த விழுதை (நீர்க்க) அதில் விட்டு கொள்ளவேண்டியது. இதிலே உப்பு ஒரு டீ ஸ்பூன் (தேவை இருந்தால் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்). கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் காய் கலர் மாறாது. ஒரு விசில் விடவும். விசில் வந்தவுடன் cooker ஐ அனைத்து விசிலை மேலே தூக்கிவிட்டு பிரஷர் ஐ ரிலீஸ் செய்து விட வேண்டும். இல்லையென்றால் காய் குழைந்து விடும், அது ஸரி அல்ல.

cooker ஐ ஓபன் செய்து கொஞ்சம் பெருங்காயம் போட்டு ஒருமுறை கிளறிவிடுங்கள். நன்றாக வாசனை வரும்.

ஒரு இழுப்பவானளியில் தேங்காய் எண்ணையில் கருவேப்பிலையை வறுத்துக்கொள்ளவும். அதிலேயே அரை மூடி (தேவையான அளவு) தேங்காய் துருவலைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். தேங்காய் சற்று செந்நிறமாக வந்தவுடன் cooker இல் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

To get a closer look on the size of the vegetables click on the photo.